Saturday, January 30, 2010

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்

இந்தகிராசு பொட்டின் நோகம் என்ன என்று பார்த்தால் ஓரேவரியில் சொல்லலாம ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்

தினமலர் பார்பானிய நாளிதழ் தமிழனுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டு வருகிறது. வாசகர் பேர்வையில் விசமத்தனமான பதிவுகளையும் செய்துள்ளது. இதற்க்கு ஆதரவாக சில கிராசு பெல்ட்டுகளும் கிராசு பசங்களும் செயல்படுவது கண்டிக்கத்தக்கது

இந்தகிராசு பொட்டின் நோகம் என்ன என்று பார்த்தால் ஓரேவரியில் சொல்லலாம ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்ம்

கிராசு பெல்ட்டு தினமலர் வெளியிட்ட விசமதனமான செய்தி பின்வருமாரு

பஞ்சர்' ஆகும் திட்டங்கள் : பா.ம.க., அதிர்ச்சி
ஜனவரி 31,2010,00:00 IST

Front page news and headlines today

பெண்ணாகரத்தில் தேர்தல் தேதி தள்ளிப்போனது, தங்களுக்கு சாதகமாக இருக்கும் என நினைத்திருந்த பா.ம.க., விற்கு, தி.மு.க.,வின் அதிரடி வியூகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாக் காளர்களை கவரும் தங்களது பிரசாரத் திட்டங்கள் அனைத்தும் "பஞ்சர்' ஆகிப் போனதால், பா.ம.க., தடுமாறிப் போயுள்ளது.


பெண்ணாகரம் இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியை வீழ்த்தும் நோக்கில், பொது வேட்பாளரை அறிவிக்கலாம் என்ற யோசனை எதிர்க்கட்சிகள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில், அவசர அவசரமாக தங்களது கட்சி வேட்பாளரை பா.ம.க., அறிவித்தது. கூடவே, தேர்தல் பணியிலும் தீவிரமாக இறங்கியது. இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஏற்கப்பட்டு, தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பா.ம.க., தொடர் பிரசாரத்தில் தீவிரமாய் இறங்கி வருகிறது. தொகுதி யில் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, வாக்காளர்களை சந்திப்பதில் ராமதாசும், பா.ம.க., எம்.எல்.ஏ.,க்களும் நேரடியாக களமிறங்கியுள்ளனர்.


பா.ம.க.,விற்கு ஈடுகொடுக்கும் வகையில், தி.மு.க., தனது அதிரடியை பெண்ணாகரத்தில் துவக்கியுள்ளது. மாற்று கட்சியினரை வளைப்பதில், கில்லாடி அமைச்சரான வேலு, தொகுதிக் குள் இறங்கினார். இதன் பயனாக பா.ம.க.,வின் பல முக்கிய பிரமுகர்களை, அவர்களது தொண்டர்களுடன் ஆயிரக் கணக்கில் தி.மு.க.,வில் இணைத்து பா.ம.க.,விற்கு முதல் அதிர்ச்சியை கொடுத்தார். "வந்தவாசி தொகுதியில் தங்களது வாக் காளர்களை கொத்துக் கொத்தாக அள் ளியது போல் இங்கும் அள்ளி விடுவாரோ' என, பா.ம.க., பயந்தது. வன்னியர்கள் அதிகம் வசிக்கும் இத்தொகுதியில், "பணமா, இனமா?' என்ற கோஷத்தை முன்னிறுத்தி பா.ம.க.,வினர் ஓட்டு வேட்டையில் இறங்கினர். மாற்றுக்கட்சியினர் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள்; ஓட்டு களை எங்களுக்கு போடுங்கள் என திண்ணை பிரசாரத்தில் இறங்கினர்.


சமீபத்தில் பெண்ணாகரம் வந்த துணை முதல்வர் ஸ்டாலின், பா.ம.க.,விற்கு அடுத்தக்கட்ட அதிர்ச்சியை அளித்தார். அவர் பங்கேற்ற விழாவிலும், 5,000க் கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியில் இருந்து தி.மு.க.,வில் இணைந்தனர். இதில், பா.ம.க.,வினர் கணிசமாக இருந்த தால், மீண்டும் அக்கட்சிக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அதோடு, பெண்ணாகரத்தில், அரசு கல்லூரி கட்டப்படும் எனவும் துணை முதல்வர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்ட, கான்கிரீட் இலவச வீடு திட்டம், இலவச உயர் கல்வி திட்டம் உள்ளிட்ட புதிய திட்டங்கள் இத்தொகுதி மக்களிடையே வரவேற்பை பெற் றுள்ளது. ஆளுங்கட்சியின் அதிரடி வியூகத்தின் முன், பா.ம.க.,வின் பிரசார திட் டங்கள் எடுபடாத நிலை ஏற்பட்டுள்ளது.


களத்தில் அ.தி.மு.க; கவலையில் பா.ம.க., "பெண்ணாகரத்தில் அ.தி.மு.க., சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவது உறுதி' என அக்கட்சியின் பொதுச் செய லர் ஜெயலலிதா கூறியுள்ளது, பா.ம.க., விற்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. வேட்பாளரை அறிவித்து விட்டு, "பொது வேட்பாளராக பா.ம.க., வேட்பாளரே இருக்கட்டுமே' என மற்ற கட்சிகளிடம், தலைகீழ் பாடம் பேசியதன் விளைவாக, தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரண்டு கூட்டணியையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணி, இத்தொகுதியில் 54,803 ஓட்டுகள் பெற்றிருப்பதாலும், அ.தி. மு.க., கூட்டணிக்கு இத்தொகுதியில் 45 ஆயிரம் ஓட்டுகள் வரை இருப்பதாலும் பா.ம.க.,வின் கவலை அதிகரித்துள்ளது.


- நமது சிறப்பு நிருபர் -
நகல் எடுக்க | எழுத்தின் அளவு: Decrease font Enlarge font |
மின்னஞ்சல் | RSS | Bookmark and Share


வாசகர் கருத்து
இன்று ஞாயிற்று கிழமை, அதனால் நான் மருத்துவர் அய்யாவை விமர்சிக்க மாட்டேன். அவருக்கு இல்லை என்றாலும் எனக்கு ஒரு நாள் ஓய்வு.

நன்றி
by திரு ஜெய்,கனடா,Canada 1/31/2010 6:41:03 AM IST
மேடையில் ஒரு சவுக்கை வைத்து விட்டு தான் மருத்துவர் பேசுவார் என்று கேள்விபட்டிருக்கிறேன்! கடைசியில் அதை வைத்து தன்னை தானே அடித்துக்கொண்டு தெருவினில் ஓடும் நாள் மருத்துவருக்கு நெருங்கிவிட்டது.. அரசியலில் மட்டுமல்ல, தனி வாழ்விலும் பச்சோந்திகளாக வாழ்பவர்களுக்கு ஏற்படும் நிலைமைக்கு எடுத்துகாட்டாக இவர் வாழ்க்கை அமையப்போவது என்னவோ உண்மை!!
by R நாதன்,சிங்கப்பூர்,Singapore 1/31/2010 6:17:02 AM IST
ஏன்டா MK.மனோஜ்,சென்னை பன்னாடை
ஏன்டா ரெண்டு நாளா உட்காந்து அழுதுகிட்டு இருக்க.
நீ சொன்ன உன்னோட அந்த 5 பன்னாடைகள் தாண்டா இவ்வளவு நாளா மத்தவங்கள விமர்சனம் பண்ணிக்கிட்டு இருந்தான்க.அதுல ரவி டொரோண்டோ வ விட்டுரு.

உங்களுக்கு மட்டும் தான் மனசுக்குல இதயம் இருக்கா.மத்தவங்களுக்கு என்ன இரும்புபெட்டியா இருக்கு ?.அத ஏன்டா புரிஞ்சுக்க மாட்டேன்கிறீங்க..

மனோஜ் பன்னாடை இன்னமே அழுகுறத நிறுத்து.உலகமே சிரிக்கபோவுது.
by g.சந்தோஷ் ,Vellore,India 1/31/2010 6:06:22 AM IST
குடிதாங்கி ஐயா, உமது வீராப்பை விட்டு விட்டு கலைஞரிடம் செல்லுங்கள் ஐயா. அவர் உமக்கு என்ன கெடுதல் செய்தார் என அம்மையாரிடம் வந்தீர்கள்?

சோனியா ஜெயலிதா அம்மையார் பக்கம் சாய்வது போல தெரிகிறது. உம்மால் தனித்து ஆட்சியை பிடிக்க முடியாது, கலைஞரிடம் செல்லுங்கள், அவர் மறுபடியும் முதல்வராக பாடுபடுங்கள்.

அரசியல் காளான் தெலுங்கன் விஜயகாந்த், பானாதி சோனியா காங்கிரஸ் தலைவர்களை கலைஞருடன் சேர்ந்து முகவரி இல்லாமல் பண்ணுங்கள் ஐயா.
by O ஓட்டேரி நரி ,Chennai,India 1/31/2010 2:37:55 AM IST
கூட்டணியோட இருந்தாலே யாரும் ஒட்டு போடமாட்டேன்ட்ராங்க. இந்த லட்சணத்தில் தனியாவா? பாவம் அந்த வேட்பாளர் ஒட்டு எண்ணிக்கை முடிவதுக்குள் தி மு க ல போய் சேராம பதறாம பாத்துகோங்க டாக்டர். உங்க தன்னம்பிகைய நான் ரெம்பவே பாராட்டுறேன்.
by P Suresh,Florida,United States 1/31/2010 2:31:18 AM IST
ஐயா குடிதாங்கி உங்களை நினைத்தால் பாவமாகவும் இருக்கு,வேதனையாகவும் இருக்கு,கவலையாகவும் இருக்கு அதே சமயம் கோபமாகவும் இருக்கு,,அவசரப்பட்டு இடை தேர்தலில் போட்டி என வாய் விடாதிர்கள் என நான் ஒரு மாதத்துக்கு முன்பே சொன்னேன்..கேட்டிரா? இல்லை இப்போ பாருங்கள் ஏன்னா ஆச்சு? திமுக,அதிமுக,இந்த இரு கட்சிகளின் நடுவில் மாட்டிகொண்டு விழி பிதுங்கி நிற்கிறீர்..வெற்றி பெற மாட்டீர்கள் ஐயா. திமுக தான் வெற்றி பெரும் பணம் அதிகாரம் தான் வெல்லும்.. இப்போ கூட ஒன்னும் கெட்டுபோகலை..பேசாமால் சுயகவுரவம்(?) பார்க்காமால் வேட்பு மனு வாபஸ் என அறிக்கை விடுங்கள்.இருக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதைய(?!!) காபாற்றி கொள்ளவும்..

இரண்டாம் இடம் கூட வரமாட்டீர்..ஏற்கனவே உங்கள் நாக்கில் சனி டான்ஸ் ஆடிகிட்டு இருக்கு..நேரம் சரி இல்லை..எல்லாம் தெரிந்தே நீங்களாகவே ஆப்பை தேடி போய் உட்காராதீர்...நல்லது சொல்றேன் கேளுங்கள் குடிதாங்கி..அப்புறம் உங்கே இஷ்டம்..
by GB ரிஸ்வான் ,jeddah,Saudi Arabia 1/31/2010 2:30:16 AM IST
TAMILNADU PEOPLE SHOULD REMOVE ENTIRELY THIS CASTE BOSS AND HIS PARTY FROM TAMILNADU POLITICAL ARENA. THIS MAFIA BOSS LEFT POLITICALY ALIVE WILL DIVIDE TAMILNADU ON THE BASIS OF CASTE. FOR HIS PERSONAL GAIN THIS CASTE BOSS WILL NOT HESITATE TO DIVIDE TAMILNADU AND PAVE PATH FOR HIS CHILDREN OR GRAND DAUGHTERS TO RULE. APART BEEING A DOCTOR THIS CASTE BOSS HAS NO REMARKABLE CHARCTERS. IN A SHORT SPAN OF 20 YEARS THIS CASTE BOSS HAS BECOME A BILLIONER.
by Paris EJILAN,-,France 1/31/2010 2:03:30 AM IST
அப்ப, இன்னைக்கு நம்ம எடிட்டர் சாருக்கு நெறைய வேலை இருக்குனு சொல்லுங்க !!!!
by J தமிழன்,Delhi,India 1/31/2010 2:02:37 AM IST
பரட்டை (தினமலர்) பத்த வச்சிட்டியே..... இதை படித்து மரம் வெட்டி இன்னும் துள்ளுவாரே, எதுக்கும் உங்க நிருபர் பத்திரம்
by R பாரிஸ் தயுப் ,Paris,France 1/31/2010 1:20:20 AM IST

கிராசு பெல்ட்டு தினமலர்

தமிழ்களை கொன்று குவித்த ராசபட்சியை புகழாழரம் செய்து கிந்து நாளிதழ் ராம் இலங்கையிடம் இருந்து பரிசு வாங்கிதை போன்று தினமலர் பார்பானிய நாளிதழ் இலங்கையிடம் இருந்து பரிசு வாங்க தமிழனுப்பு எதிரான செய்திகளை வெளியிட்டு வருகிறது. வாசகர் பேர்வையில் விசமத்தனமான பதிவுகளையும் செய்துள்ளது. இதற்க்கு ஆதரவாக சில கிராசு பெல்ட்டுகளும் கிராசு பசங்களும் செயல்படுவது கண்டிக்கத்தக்கது

கிராசு பெல்ட்டு தினமலர் வெளியிட்ட விசமதனமான செய்தி பின்வருமாரு

கிடைத்தது வெற்றி; அடுத்தது என்ன? அதிபர் ராஜபக்ஷே மீதான எதிர்பார்ப்பு அதிகரிப்பு
ஜனவரி 31,2010,00:00 IST

Front page news and headlines today

தொடர் குண்டு வெடிப்புகள், மனித வெடிகுண்டு தாக்குதல்கள், ரத்தச் சிதறல், உயிர்ப் பலி போன்ற கோரமான சம்பவங்கள் ஓய்ந்து, இலங்கை மக்கள் கடந்த சில மாதங் களாக, அமைதிக் காற்றை சுவாசித்து வருகின்றனர்.


விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டிய சூட்டோடு, அதிபர் தேர்தலையும் நடத்தி, தன்னைப் பற்றி அவதூறு பரப்பியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமோக வெற்றி பெற்று, மீண்டும் மகுடம் சூடியுள்ளார், ராஜபக்ஷே. இந்த வெற்றியை அவர் எப்படி பயன்படுத்திக் கொள் ளப் போகிறார் என்பதே, தற்போது எழுந்துள்ள கேள்வி. இலங்கையும், அதன் அண்டை நாடுகளும் மட்டுமல்லாமல், சர்வதேச நாடுகளும் கூட, ராஜபக்ஷேவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பதை கூர்ந்து கவனித்து வருகின்றன.


சட்டம் படித்தவர்: இலங்கை அதிபர் ராஜபக்ஷே, அரசியல் குடும் பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை டி.ஏ.ராஜபக்ஷே, விஜயேந்திர தகநாயகே அமைச்சரவையில், விவசாய அமைச்சராக பதவி வகித்தவர். இவர் இறந்த பின் தான், ராஜபக்ஷே அரசியலுக்குள் அடி எடுத்து வைத்தார். சட்டம் படித்த ராஜபக்ஷே, கடந்த 1970ல் முதல் முதலாக, இலங்கை சுதந்திர கட்சி வேட்பாளராக பார்லிமென்டுக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதற்கு முன், சில சிங்கள திரைப்படங்களிலும் இவர் நடித்துள் ளார். கடந்த 1994ல் சந்திரிகா குமாராதுங்கா அமைச்சரவையில் தொழிலாளர் துறை அமைச்சராக பதவியேற்றார். இலங்கை எதிர்க்கட்சித் தலைவராகவும் ராஜபக்ஷே பதவி வகித்துள் ளார். இதற்கு பின், 2004ல் நடந்த தேர்தலில் இவரது தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. பார்லிமென்டில் ராஜபக்ஷே கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்தது. இதையடுத்து, இலங்கையின் 13வது பிரதமராக இவர் பதவியேற்றார்.


அதிபரானார்: கடந்த 2005ல் நடந்த அதிபர் தேர்தலில் இலங்கை சுதந்திர கட்சி வேட்பாளராக ராஜபக்ஷே அறிவிக்கப்பட்டார். இவரை எதிர்த்து, ஐக்கிய தேசிய கட்சி சார்பில், முன் னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே போட்டியிட்டார். இந்த தேர்தலில், ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ராஜபக்ஷே வெற்றி பெற்று, முதன் முதலாக அதிபராக பதவியேற்றார்.


போரில் கிடைத்த வெற்றி: ராஜபக்ஷே அதிபராக பதவியேற்றபோது, விடுதலைப் புலிகள் இலங்கையில் அசைக்க முடியாத செல்வாக்குடன் இருந்தனர். தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களால், தலைநகர் கொழும்பு தினமும் அதிர்ந்து கொண்டு இருந்தது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே அஞ்சி நடுங்கினர். விடுதலைப் புலிகளை எப்படியாவது ஒழித்துக் கட்டுவது என உறுதி எடுத்த ராஜபக்ஷே, வெளிநாடுகளிடம் இருந்து பெற்ற ராணுவ உதவிகளுடன், புலிகளுக்கு எதிரான சண்டையை தீவிரப் படுத்தினார். விடுதலைப் புலிகளின் கோட்டைகளாக விளங்கிய கிளிநொச்சி, முல்லைத் தீவு உள்ளிட்ட பகுதிகள் வீழ்ச்சி அடைந்தன.இறுதியாக கடந்தாண்டு மே மாதம் நடந்த இறுதிக் கட்ட போரில், விடுதலைப் புலிகள் முற்றிலும் அழிக்கப்பட்டனர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கை மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளுக்கும் பெரும் சவலாக விளங்கிய விடுதலைப் புலிகளை தோற்கடித்தது, ராஜபக்ஷே நிகழ்த்திய மிகப் பெரிய சாதனையாக கருதப்பட்டது.


முன்கூட்டியே தேர்தல்: இந்த சாதனையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டார், ராஜபக்ஷே. இலங்கையை பொறுத்தவரை அதிபரின் பதவிக் காலம் ஆறு ஆண்டுகள். ஆனால், பதவிக் காலம் முடிவடைவதற்கு இரண்டு ஆண்டுகள் முன்னரே, அதிபர் தேர்தலை நடத்த உத்தரவிட்டார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான வெற்றியால், சிங்கள மக்களிடையே தனக்கு செல்வாக்கு அதிகரித்திருப்பதை கருத்தில் கொண்டு, அதிரடியாக காய் நகர்த்தினார் அவர்.


பொன்சேகாவால் சங்கடம்: இந்த சூழ்நிலையில் தான், புலிகளுக்கு எதிரான போரில் ராணுவ தளபதியாக செயல்பட்ட சரத் பொன்சேகா, ராஜபக்ஷேவுக்கு புதிய சவாலை ஏற்படுத்தினார். அவரும் ஐக்கிய தேசிய கூட்டணி சார்பில் களம் இறங்கினார். புலிகளுக்கு எதிரான வெற்றியை, பொன் சேகாவும் பங்கு போட வந்ததால், ராஜபக்ஷேவுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. இலங்கையில் உள்ள தமிழர் கட்சியில், பிரதான கட்சியான தமிழ் தேசிய கூட்டணி, சிங்களர்களின் அபிமானம் பெற்ற ஜனதா விமுக்தி பெரமுனா போன்ற கட்சிகளும் பொன் சேகாவை ஆதரித்தன. இலங்கையில் நடந்த போரின் போது, மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும், போர்க்குற்றம் நடந்துள்ளதாகவும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், ராஜபக்ஷேவுக்கு நெருக்கடி கொடுத்தன. பல்வேறு தரப்பிலும் இருந்து வரும் சவால்களை முறியடிக்க வேண்டுமெனில், தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயம், ராஜபக்ஷேவுக்கு ஏற்பட்டது. இதுபோதாதென்று, தேர்தல் கருத்துகணிப்புகளும் பொன் சேகாவுக்கு ஆதரவாகவே வந்தன.


அபார வெற்றி: இத்தனை நெருக்கடிகள் ஏற்பட்டபோதும், ராஜபக்ஷே உறுதியாக இருந்தார். முடிவுகள் வெளியாகத் துவங்கியதும், அவரது உறுதி, எந்த அளவுக்கு உண்மை என்பது தெரிந்தது. தமிழர்கள் வசிக்கும் பகுதிகள் தவிர, மற்ற அனைத்து பகுதிகளிலும், மிகப் பெரு வாரியான ஓட்டுகள் அவருக்கே கிடைத்தன. இறுதியில், 18 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தனது எதிரிகளுக்கு பதிலடி கொடுத்தார்.


வெற்றி சாத்தியமானது எப்படி? ராஜபக்ஷேயின் தேர்தல் வெற்றி, சிங்கள மக்கள் அவருக்கு கொடுத்த பரிசு என்று தாரளமாக கூறலாம். தங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய விடுதலைப் புலிகளை ஒழித்தவர், சுதந்திரமாக தெருக்களில் நடமாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக, ராஜபக்ஷேவுக்கு அவர்கள் அமோக வெற்றியை பெற்றுத் தந்துள்ளனர். சரத் பொன்சேகாவின் சொந்த ஊரில் கூட, ராஜபக்ஷே தான் அதிகமான ஓட்டுகளை பெற்றார். இதிலிருந்து, சிங்கள மக்கள் அவரை எந்த அளவுக்கு ஆதரித்தனர் என்பது தெளிவாக தெரியும். கடந்த தேர்தலில் தப்பித்தோம், பிழைத்தோம் என, ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜபக்ஷே, இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவினாலும், 18 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகளை பெற்று, வெற்றி பெற்றார். நாட்டில் இருந்த பயங்கரவாத அச்சுறுத்தலை அவர் ஒழித்ததே இதற்கு காரணம்.


மேலும், தமிழ் தேசிய கூட்டணி கட்சியுடன், சரத் பொன்சேகா கூட்டணி வைத்திருந்ததும், ராஜபக்ஷேவின் வெற்றியை எளிதாக்கி விட்டது. தமிழ் அரசியல் கட்சி தலைவர்களுடன் கூட்டணி வைத்திருக்கும் எவரையும் சிங்கள மக்கள் விரும்பவில்லை. சரத் பொன்சேகா, ரணில் விக்கிரமசிங்கே ஆகிய தலைவர்களும், ஜனதா விமுக்தி பெரமுனா போன்ற கட்சிகளும் இதற்கு விதி விலக்கு அல்ல என்பதை, ஓட்டுச் சீட்டின் மூலம் அழுத் தம், திருத்தமாக சிங்களர்கள் நிரூபித்து விட்டனர். இதை விட முக்கியமான காரணம், சரத் பொன்சேகா ஒரு தேர்ந்த அரசியல்வாதி அல்ல என்பது தான். அடிப்படையில் அவர் ஒரு ராணுவ வீரர். ரணில் விக்கிரமசிங்கே போன்றவர்கள் தான், அவரின் பின்புலமாக செயல்படுவர் என்பதையும் சிங்கள மக்கள் தெளிவாக உணர்ந்து இருந்தனர்.


தமிழர் ஓட்டு கிடைக்காதது ஏன்? தமிழர்கள் அதிகமாக வசிக் கும் மாவட்டங்களில், ராஜபக்ஷேவுக்கு மிக குறைவான ஓட்டுகளே கிடைத்துள்ளன. தமிழர்களின் பிரதான கட்சியான தமிழ் தேசிய கூட்டணி, பொன் சேகாவுக்கு ஆதரவு தெரிவித்தது இதற்கு முக்கியமான காரணமாக இருந்தாலும், ராஜபக்ஷே குறித்த பயம் தமிழர்களிடம் இன்னும் குறையவில்லை என்பதும், ஒரு காரணமாக உள்ளது. ராஜபக்ஷே மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நமக்கு எதிராக செயல்படுவாரோ என்ற அச்சம், தமிழர்களிடம் நிலவியதால் தான், பொன் சேகாவுக்கு அவர்கள் ஓட்டளித்ததாக, இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


என்ன செய்யப் போகிறார் ராஜபக்ஷே? தனது முந்தைய பதவிக் காலத்தில், பயங்கரவாதத்தை ஒடுக்குவதிலேயே அதிக கவனம் செலுத்திய ராஜபக்ஷே, தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப் போவதாக கூறியுள்ளார். போரால் பாதிக்கப் பட்ட இலங்கை போன்ற நாடுகளில், பொருளாதார கட்டமைப்பை சீரமைக்க வேண்டியது, மிகவும் அவசியமான ஒன்று தான். இலங்கையின் பொருளாதார மீட்சிக்காக சீனா, இந்தியா போன்ற அண்டை நாடுகள், கோடிக் கணக்கில் முதலீடு செய்யவும் தயாராக உள்ளன. நாடு, தற்போது அமைதிப் பூங்கா ஆகி விட்டது. வேறு சில வெளிநாடுகளும், இலங்கையில் முதலீடு செய்ய முன்வரலாம். எனவே, பொரு ளாதார வளர்ச்சியை எளிதாக அடைந்து விடலாம். ஆனால், அமைதி நீடிக்க வேண்டுமானால், சிறுபான்மையாக உள்ள தமிழர்களின் நம்பிக்கையையும் அவர் பெற வேண்டும்.


முள்வேலி முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ள எஞ்சிய தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும். தமிழர்கள் மறு குடியமர்த்தப் பட்ட பகுதிகளில், போதிய அடிப்படை வசதிகளை செய்து தருவதோடு, அவர்களுக்கான வேலை வாயப்புகளையும் அதிகரிக்க வேண்டும். அங்குள்ள தமிழர்களும், இலங்கை மண்ணின் மைந் தர்களே. அவர்களை புறக்கணித்து விட்டு, இலங்கையை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியாது. தேர்தலில் வெற்றி பெற்றாகி விட்டது. இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு அதிபர் அவர் தான். நீண்ட கால போர், தேர்தல் என, ராஜபக்ஷேவுக்கு தொடர்ந்து வெற்றிப் பரிசாக கிடைத்து வருகிறது. ராஜபக்ஷே பெற வேண்டியது இன்னும் ஒரே ஒரு விஷயம் தான். அது, இலங்கைத் தமிழர்களின் நம்பிக்கை. அதையும் வெகு விரைவில் பெறுவார் என, நம்புவோம்.


சிவாஜி லிங்கம் படுதோல்வி: இலங்கை தமிழ் தேசிய கூட்டணிக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் சிவாஜிலிங்கம். எம்.பி.,யாகவும் உள் ளார். அதிபர் தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டணி, பொன் சேகாவுக்கு ஆதரவு தெரிவித்தது. இதை சிவாஜிலிங்கம் ஏற்கவில்லை. அதிபர் தேர்தலில் சுயேச்சையாக போட் டியிட்டார். தமிழர்கள் இவருக்கு ஆதரவு அளிப் பர் என, கூறப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் சிவாஜிலிங்கத்துக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. அவருக்கு 9,662 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன.


ராஜபக்ஷே வெற்றிக்கான காரணம்


* விடுதலைப் புலிகளை ஒழித்து, நாட்டு மக்களை மிகப் பெரிய அச்சுறுத்தலில் இருந்து விடுவித்தது.


* இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்காக சீனா, இந்தியா போன்ற அண்டை நாடுகளின் உதவியை கேட்டு பெற்றது.


* சண்டை முடிவுக்கு வந்தபின், இலங்கைக்கு வருவாயை கொட்டும் சுற்றுலாத் துறையையும் மற்றும் கட்டமைப்புத் துறையையும் மேம்படுத்த நடவடிக்கை எடுத்தது.


* தொழிலதிபர்களிடம் நெருக்கமான உறவை ஏற்படுத்தி, முதலீடு செய்ய வைத்தது.


பலவீனம்


* சிங்கள மக்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் மட்டுமே, அதிக ஓட்டுகள் பெற்றுள்ளது.


* சிறுபான்மையாக உள்ள தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் ஓட்டுகளை பெறாதது.


* இலங்கையில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக அடக்குமுறை நடப்பதாக கூறப்படும் புகார்கள்.


- நமது சிறப்பு நிருபர் -
நகல் எடுக்க | எழுத்தின் அளவு: Decrease font Enlarge font |
மின்னஞ்சல் | RSS | Bookmark and Share


வாசகர் கருத்து
ராஜபக்ஷ ஒரு verygood man
நல்ல பதிலடி புலி ஆதரவாளர்களுக்கு
by ss s.sutha,toronto,Canada 1/31/2010 4:04:08 AM IST
இவரின் வெற்றிக்கு காரணம் சிங்களர் மட்டும் இல்லை ஒரு வகையில் தமிழர்களும் காரணம் என்பது மறுக்க முடியாது..பிரபாகரனை கொன்று புலிகளை அடக்கி தீவிரவாதத்தை ஒழித்துக்கட்டியது.

தமிழ் ஈழம் மலராமால் போக முக்கிய காரணமே இலங்கை தமிழ் தலைவர்களின் ஒற்றுமையின்மை தான்,பல குழுக்களாக பிரிந்து ஒருவருக்கொருவர் அடித்துகொண்டது
கடைசியில் விடுதலை புலிகளுக்குள் இருந்த நல்ல நல்ல தலைவர்கள் மாற்று கருத்து சொன்னதால் சுட்டு கொல்லபட்டார்கள் பிரபாகரனால்.
பிரபாகரன் கூட ஒரு சர்வதிகார மனப்பான்மை கொண்டவர்..

இப்போ பிரபாகரன் இல்லை..அவர் இல்லாமால் போக காரணம் ராஜபக்சே மற்றும் இவருக்கு உதவிய நாடுகள். அதில் ஒன்று நமது இந்தியா.

ஆக ஒரு தமிழனை கொன்று தான் இன்று இவர் வெற்றி பெற்று உள்ளார்..ஆக இவர் வெற்றி பெற்றதும் கொல்லப்பட்ட பிரபாகரனால் தான் தமிழர்களின் பிணங்களின் மேல நடந்து வந்து வெற்றி பெற்றுள்ளார் இவர்..இனி மேற்கொண்டு யாருக்கு தொந்திரவு தருவார் எனில் இந்தியாவுக்கு தான் சீனாவுடன் சேர்ந்து..முடிந்தால் பாகிஸ்தானும் சேரும் இந்த ராஜபக்சே உடன்..இந்திய அரசுக்கு தலைவலிதான் இலங்கை இனி வரும் நாட்களில்..
by GB ரிஸ்வான்,jeddah,Saudi Arabia 1/31/2010 3:00:29 AM IST
அடுத்தது மீதம் உள்ள கொஞ்ச nenja தமிழ் makala konutu thaniya pootutu thoonga vendiyathu thaan. Oru vaaram kalichi Delhi vanthu amayaruku oru party kuduthu nandri solitu poi yethuthu pooti ita Ponseka vai kaali panitu yenaku thaan niraya palu irukunu E E E E E E nu ilichikitu oru poss kuduthomanu ilama....
by P Suresh,Florida,United States 1/31/2010 2:39:41 AM IST
அடுத்தது என்ன தமிழக அரசியல் வாதிகளின் ஆலோசனையோடும் இந்திய அரசின் துணையோடும் என் இன தமிழ் மக்களை கொன்று குவித்தது பத்தாது என்று அடிமையாய் நடத்துவதுதான்....ம்ம் நான் கருத்து எழுதி என்ன ஆகப் போகிறது அதிகாரத்தில் இருப்பவர்கள் தன் சுய நலத்தை கருதாமல் இனியாவது என் தமிழ் இனத்தை காப்பார்கள் என்ற நப்பாசைதான் !!!!
by k siva,Mumbai,India 1/31/2010 2:21:51 AM IST
இலங்கையில் கூட்டமைப்பினர் திரும்பவும் சரத் போன்செகவுக்கு ஆதரவு கொடுத்து திரும்பவும் மாபெரும் தவறை செய்து விட்டனர். 2005 தேர்தலிலும் மகிந்த ராஜபக்ஷவிடம் காசு வாங்கி கொண்டு புலிகள் ரணிலை வர விடாமல் செய்தனர். இதற்க்கு கூட்டமைபினரும் சேர்ந்து ஆதரவு தெரிவித்தினர். இப்போது வெளி நாட்டின் பூகளின் சொல்லுக்கு பயந்து மகிந்தவை பழி வாங்கிரதிற்ற்காக, திரும்பவும் தமிழ் மக்களை பலி ஆக்கி விட்டார்கள். இந்த கூட்டமைப்பினர் தேர்தலின் போது தான் இலங்கைக்கு வருவார்கள். மற்றம்படி தமிழ் மக்கள் கஷ்டப்படும்போது வெளி நாட்டில் பிள்ளைகளுடன் சுகமாக இருப்பார்கள். இனி இலங்கை அமைதியாக இருக்க வேண்டும் என்றால், இந்தியாவில் இருக்கும் வைகோ, நெடுமாறன், சீமான் திருமாவளவன், ராமதாஸ், அமைதியாக இருந்தாலே, எங்கள் நாட்டுக்கு அமைதி கிடைக்கும்.
by பாலா,vancouver,Canada 1/31/2010 12:59:40 AM IST
திரு ராஜபக்ஷே அவர்கள் தமிழ் நாடு அரசியல்வாதிகளிடத்தில் சிலவற்றை கற்றாலே தமிழர்களை எப்படி பிரித்து ஆள்வது என்று அறியலாம். முதலில் தமிழர்களுக்கு இடஒதுகீட்டை கொண்டுவந்தால் 100 ஆகா பிரிவார்கள், பின்பு இலவசங்களை கொண்டுவந்தால் 1000 ஆகா பிரிவார்கள். ஒரு கூட்டம் அடுத்து என்ன கிடைக்கும் என்று காத்திருக்கும், மற்றொரு கூட்டம் எதுவும் கிடைக்காது என்று சூன்யமாய் இருக்கும். பின்பு பிரிந்து கிடக்கும் தமிழன் அவனுக்குள்ளே அடிதுகொள்வான், பின்பு அவனை ஆள்வது மிக சுலபம். இதை தான் சீமயிலிருந்து வந்த பரங்கியர்கள் நமக்கு சொல்லிகொடுத்தது. வாழ்த்துக்கள் திரு ராஜபக்சே, கப்பத்தை தமிழக அரசியல் வாதிகளிடம் செலுத்தவும்.

Wednesday, January 27, 2010

தினமலர்

தினமலர் என்ற பார்பானிய நாள் இதழ் தமிழ் இனத்துக்கும் வன்னிய சமுகத்துக்கும் போராடும் ஒர் மனிதரை பற்றி வாசகர் கருத்து என்ற போர்வையில் அவதூராக எழுதி உள்ளது விசமத்தனமானது. தினமலர் என்ற பார்பானிய நாள் இதழ் பின்வருமாறு கருத்து வெளியிட்டுள்ளது


சமுதாயம் என்றால் வன்னியர் தான் : ஆத்திரப்படுகிறார் ராமதாஸ்
ஜனவரி 28,2010,00:00 IST

Front page news and headlines today

செஞ்சி : "சமுதாயம் என்று நான் சொல்வது, வன்னிய ஜாதியை மட்டும் தான்' என செஞ்சியில் நடந்த திருமண விழாவில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அண்ணமங்கலம் கிராமத்தில் நேற்று நடந்த திருமண விழாவில் அவர் பேசியதாவது: வன்னியர்களுக்காக, 250 ஏக்கர் நிலத்தில் ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் ஐ.ஏ.ஸ்., - ஐ.பி.எஸ்., கட்டடம் கட்டி வருகிறோம். இங்கே படிக்கும் வன்னியர்களுக்கு, ஒரு ரூபாய் கூட கட்டணம் வாங்குவதில்லை. சமுதாயம் முன்னேற இதை செய்து வருகிறேன். நான் சமுதாயம் என்று சொல்வது வன்னிய ஜாதியைத் தான். கடந்த 1987ல் சாலை மறியல் செய்த போது, எம்.ஜி.ஆர்., என்னை அழைத்துப் பேசினார். அவரிடம் வன்னியர் குறித்து சொன்னேன். இதை ஏன் என்னிடம் முன்பே சொல்லவில்லை என, அதிகாரிகளை கேட்டார். அப்போதும் ஒற்றுமையும், விழிப்புணர்வும் இல்லை. இதனால் 10 ஆயிரம் பேர் இருக்கும் ஜாதியைச் சேர்ந்த கருணாநிதியிடமும், சட்டசபையில் தன்னை பாப்பாத்தி என்று சொல்லிக் கொண்டதுடன், வன்னியர்களை மரம் வெட்டிகள், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் என்று சொன்ன ஜெ.,வையும் தேடிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.


வன்னியர்களைப் பற்றி ஜி.கே. மணி சட்டசபையில் பேசிய போது, ஆற்காடு வீராசாமி கண்ணை காட்டியதால், சுதர்சன நாயுடுவும், பீட்டர் அல்போன்சும் இங்கே ஜாதி பற்றி பேசுவது சரியா என விமர்சித்தனர். பா.ம.க.,வின் 18 எம்.எல்.ஏ.,க்களும் ஒட்டு மொத்தமாக எதிர்த்ததால் அடுத்த நாள் ஜி.கே.மணியை பார்த்த இடத்தில் எல்லாம் இரண்டு பேரும் மன்னிப்பு கேட்டனர். நாய் கட்சி ஆரம்பித்தாலும், அதுல போயி சேர்ந்துடற நிலை உள்ளது. இப்படியே சென்றால், என்றைக்கு நாம் ஆள்வது. ஓட்டு போடுகின்ற அன்று ஒரு நாள் மட்டும் ராமதாஸ் பேச்சை கேட்டு, ஓட்டு போட்டா தமிழ்நாட்டை நாம ஆளலாம். 130 எம்.எல்.ஏ.,க்கள் ஜெயிப்பாங்க. செட்டியார், முதலியாருன்னு எந்த ஜாதிக்காரனும் நமக்கு ஓட்டு போட வேண்டாம். தி.மு.க.,வில் தலைவர், பொதுச் செயலர், பொருளாளர் பதவிக்கு ஒரு வன்னியர் கூட வந்ததில்லை. அ.தி.மு.க., வில் ஜெ., நிரந்தர பொதுச் செயலர்.


பெண்ணாகரம் தொகுதியில், 2,000 பெண்களை கூட்டி கூட்டம் நடத்தினோம். அங்கிருந்த பெண்களிடம், எத்தனை பேர் பட்டுச் சேலை வைத்துள்ளீர்கள் என கேட்டேன். ஒரே ஒரு பெண் மட்டும் கை தூக்கினார். அடுத்து எத்தனை பேர் தங்கச் சங்கிலி போட்டுள்ளீர்கள் என கேட்டேன். ஒருவர் கூட கை தூக்கவில்லை. எல்லாரும் மஞ்சள் கிழங்கை கட்டி அவர்கள் சரடு போட்டுள்ளனர். சாமசோறும், கொள்ளு ரசமும், களியும் சாப்பாடு. இவர்களைப் பற்றி கவலைப்பட்டவர்கள் யார். இலவசங்களை கொடுத்து விட்டு ஜோரா குடிக்க சொல்றாங்க. வன்னியர்களை திருத்த முடியாது என்று விட்டுவிட முடியாது. 18 இடங்களில் தி.மு.க., வெற்றி பெற்றதை விட, ஏழு இடங்களில் பா.ம.க., தோற்றது சந்தோஷம் என்கிறார் ஸ்டாலின். வன்னியர்கள் 500 ரூபாய்க்கு விலை போய் விட்டனர். எனது ஆதங்கத்தை எங்கே கொட்டி தீர்ப்பது. எனவே தான் இந்த திருமண விழாவில் கொட்டித் தீர்த்தேன். இவ்வாறு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.
நகல் எடுக்க | எழுத்தின் அளவு: Decrease font Enlarge font |
மின்னஞ்சல் | RSS | Bookmark and Share


வாசகர் கருத்து
ஐய்யா வன்னியரே!!!
உங்களுக்கு அன்னியர் ஒட்டு கிடைக்காதே.
அப்படி உங்கள் சமுதாயத்துக்கு முன்னும் பின்னும் குழி தோண்டி விட்டாரே கலைஞர்.
எப்படி ஐய்யா நீங்கள் தமிழகத்தின் முதல்வர் ஆக முடியும்?
எப்படி ஐய்யா உங்கள் சமுதாயத்திற்கு நன்மை செய்ய முடியும்?
ஏனைய்யா இப்படி ஆவேசம் பட்டீர்கள்?
அரசியலுக்கு இது ஏற்றதா?
அடுத்த முதல்வராகும் உங்களுக்கு இது ஏற்றதா?
வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் பானையை உடைத்து விட்டீரகலே.
வன்னியகளின் வருங்காலத்தை பாழாக்கி விட்டீர்களே.
இது உங்கள் மகனுக்கு பதவி பரிப்போயவிட்டதால் எழுந்த சுயநலமா?
இல்லை உங்களுக்கு அடுத்து எந்த வன்னியனும் ஆட்சிக்கு வரகூடாது என்ற பொது நலமா?
ப. மாதவன்
by B MADHAVAN,chennai 119,India 1/28/2010 7:31:49 AM IST
''''epporul yaar yaarvaai keatpinum apporuL
meipporuL kaaNpathu aRivu''''
i want to ask few questions....
1.anyone contirbuting here, ignored/removed their caste from thier registries, marriage or do intercaste marriage? Talk with reality.
2.Atleast Ramdoss is clear that he is voicing for his community boldly. He does not take away any communities rights.
3. atleast i practically know, due to his contributions one of my own friends who got into medical college (due to reservation for MBC) who came from a very very poor family. Just after Ramdoss early day protests . No firend of mine and his family members are economically sound (now he did an intercaste marriage). (i''''ve many examples).
4. If people are economically come up along with education the caste system will automaitcally fade away.
5. I hope its question of survival, how to run a political party (that where the alliance game come into picture) we should not just blame Ramdoss only.
i read Dinamalar since day 1 they started thier Web publication. Let me see if they post this comment.
-thanks





by periya Ko,Singapore,Singapore 1/28/2010 7:26:10 AM IST
ராமதாஸ் தயவு செய்து ஜாதி பேரை சொல்லி மக்களை சீரழிக்காதே. நீ யாரென்று உலகத்திற்கு தெரிந்து விட்டது. இனிமேல் உனது பருப்பு வேகாது.

by T Veyilon,India,India 1/28/2010 7:25:05 AM IST
இவன் ஒரு போரம் போக்கு, இது ஒரு news .........
by raj,SDcasfgadg,India 1/28/2010 7:09:53 AM IST
Ramadoss,chandrasekara rao,thakkare and co pontrorgal indiavin sapakedu
by 12 indian sekar,tricy,India 1/28/2010 7:08:17 AM IST
போ போ போய் தண்ணிய குடி
by K Santhosh,bangalore,India 1/28/2010 7:04:05 AM IST
''''எனக்கு ஒரு மந்திரி பதவி கொடுங்க'''' இப்படி நேரா கேட்க வேண்டியதுதானே அத விட்டு நல்லவர் மாதிரியே பேசுறது! சினபுள்ள தனமா இல்ல.
by S சிவா,Chennai,India 1/28/2010 7:00:23 AM IST
இந்த ஆளுக்கு வேற வேல வெட்டியே இருக்காதா... இதெல்லாம் ஒரு பொழப்பா... தூ......
by S Arun குமார்,Singapore,India 1/28/2010 6:46:16 AM IST
ஜாதி வெறியை தூண்டாதே .
by r prabu,johor,Malaysia 1/28/2010 6:44:29 AM IST
ஜாதி இலாத சமுதாயம் அமைப்போம் என கூறும் அரசியல்வாதிகளே குறிபிட்ட ஜாதி பற்றி பேசுவது நியாயமா? டாக்டர் அவர்களே அப்போ நீங்கள் ஆசிக்கு வந்தால் உங்கள் ஜாதி மட்டும் தான் நன்மைபெருமா? ''''செட்டியார், முதலியாருன்னு எந்த ஜாதிக்காரனும் நமக்கு ஓட்டு போட வேண்டாம்'''' இந்த கருத்துக்கு எல்லாம் போடா சட்டம் கிடையாதா?. மருத்துவர் அவர்களுக்கு நாவடக்கம் வேண்டும்.
by Mr இளங்கோவன்,Singapore,India 1/28/2010 6:44:05 AM IST
தயவு செய்து இந்த ஜந்துவ (டாக்டர் அய்யா) நம்பாதீங்க.
by R Hari,Singapore,Singapore 1/28/2010 6:41:32 AM IST
adai kudi thangi vaniar athunai peum unaku votu potal kooda unala 1 mla seatu kooda jaikamudiyathu, muthala manithana iruka poru appuram enathuku konja naal munadi tamizhan thamizh vazhalai kati(namba kulikara soap thanunga) punaku theru puzhudhi inu ularikitu irundha?pesama anbumaniku mp cum cabinet minister kudukara katchi than nala katchi endru solittu pothikitu iru.
by sun sundar,singapore,India 1/28/2010 6:36:15 AM IST
தினமலர் எடிட்டர் இயா அவர்களே, இன்னைக்கு உங்களுக்கு செம வேலை இருக்கு ரெடியா இருங்கோ......
ம்ம்ம் ஸ்டார்ட் மியூசிக் .......
by R Rajiv,Singapore,Singapore 1/28/2010 6:24:50 AM IST
இனி வன்னியர் ஒட்டு அன்னியருக்கு கிடையாது.வாழ்க வன்னியர் குளம் வளர்க பாமாக.
by m raja,chidambaram,India 1/28/2010 6:23:57 AM IST
இந்த கணக்கெடுப்பு எல்லாம் ஏன் நீங்க மத்தியிலே ஆட்சியிலே இருக்கும்போது சொல்லலே . அப்போ சமுதாயம் ரொம்ப நல்ல இருந்துச்சா?. ஒருவேளே தைலாபுரம் தன சமுதாயமோ?. வன்னியர்களே சிந்தியுங்கள் . ஜாதி அரசியல் வேண்டாமையா . உங்கள வச்சு முன்னேரிட்டங்க . புரிஞ்சிக்கிங்க
by k ஜீவன்,singapore,Singapore 1/28/2010 6:21:10 AM IST
இந்த கொசுவ என்ன பண்றது முருகா?
by V மாணிக்கம்,chennai,India 1/28/2010 6:19:23 AM IST
நீ இந்த ஜென்மத்தில தமிழ்நாடு முதல் அமைச்சர் ஆக முடியாது
by J nancy,bangalore,India 1/28/2010 6:14:21 AM IST
அய்யா ராமதாஸ்...... நீங்க திருந்துவதாக தெரியவில்லை. உங்கள் கட்சிக்கு எதிரி நீங்கள் தான்....உங்களுக்கு சனி நாக்கில் அமர்ந்திருக்கிறார் என நினைக்கிறேன். அடுத்த ஆப்பு பென்னாகரத்தில் காத்து இருக்கிறது. நீங்கள் போய் அதன் மீது அமர்ந்துகொள்ளுங்கள்.
by Dr துரை அண்ணாமலை ,singapore,India 1/28/2010 6:12:32 AM IST
ஜாதி இல்லையடி பாப்பா.. ன்னு பாடிய பாரதியார் பிறந்த மண்ணில் இப்படி ஒரு ஜென்மம். அதுவும் தேர்தல் சமயத்தில் மட்டும் தான் வன்னியர் ன்னு பேசுவார்., கலிகாலம் ங்கறது சரியாதான் இருக்கு.
by sg karthik,Kualalumpur,Malaysia 1/28/2010 5:58:33 AM IST
ராமதாஸ் அவர்களே..கட்சி அரபிக்கும் முன்னாடி நீங்க சைக்கிள் ல வந்து..மருத்துவம் பார்த்திங்க..ஜாதி கட்சி ஆரம்பிச்சி..இப்போ எல்லா வன்னியரின் சொத்தும் உங்கள் கையல ..பித்து பிட்ச மாதிரி..ஜாதி பத்தி பேசுறீங்களே..
by சிவா,chennai,India 1/28/2010 5:56:31 AM IST

cat comes out with it''''s real face.
by m subbu,erode,India 1/28/2010 5:48:11 AM IST
ஆஹா காமெடி ராசா இனி காமெடி தான்







by kt krishna,FREMONT AMERICA,United States 1/28/2010 5:46:31 AM IST
அய்யா ராமதாஸ் அவர்களே உங்களோட கஷ்டம் புரியுது. கருணாநிதியும் ஜெயலலிதாவும் நம்மள மதிக்க மாற்றங்க என்னடா பண்றது அப்டின்னு romba புலம்பிருக்கீங்க.......Haiti -ல லட்ச கணக்குல எல்லாரும் செத்து போயிருகாங்க ஆனா உங்கள மாதிரி ஆளுங்கள கடவுள் விட்டு வச்சிருக்கன்-நு நெனச்ச கஷ்டமா இருக்கு........Just remember one thing buddy, if that kind of earth quake happens in our country we will get ruin totally. It does not distinguish vanniyar chettiar mudaliar differently......
by Jayamurugan,St Louis, MO,India 1/28/2010 5:28:16 AM IST
I agree with the sentiments of PMK Ramadas.Though we cannot run any party based on cast/religion, the fact that majority suffers cannot be ignored.It is on this basis only BJP opposes the reservation on caste/religion basis and economic reservation is a must. There are laks and laks of brahmin students who with all academic brilliance cannot contimue higher studies because the UPA and especially the DMK is not bothered about them.The status of vanniars in Tanli nadu is not that good. The voters should give a jolt to DMK in the By-election.At the same time PMK should alsogo with other caste people, because ultimately when a party comes to power it is not for one caste/religion but for the entire population irrespective of they have voted or not. Jaya and Vaiko should support PMK now to show the door to DMK
by T veera,chennao,India 1/28/2010 5:27:24 AM IST
இடைத்தேர்தலை முன்னிட்டு சாதி சங்கை ஊதுகிறார் நமது பச்சோந்தி மருத்துவர் ராமதாஸ் ஐயா. நமது மக்களும் காத்திருக்கிறார்கள் இவருக்கு சரியான பாடம் புகட்ட.
by S Balan,Seremban,Malaysia 1/28/2010 5:22:26 AM IST
சமுதாயம் என்பது vanniyar என்றால் , ராமதாஸ் குடும்பம் அதன் கொள்ளை குடும்பமா !!!. தமிழ் மக்கள் என்ன இ.வா வா ? . எலேச்டின் கமிஷன் இவனை மாதிரி ஆளுங்களியல்லாம் பிடுச்சு உள்ள போடணும் .
by sas swami,singapore,Singapore 1/28/2010 5:03:51 AM IST
wood cutter ramadoss, your satan for tamilnadu. Don''''t talk too much. First we are indian, then tamilians. who is vanniyan,panniyan, where you have learn the doctor vannian collage, where you have studied in vanniyan school........ get lost from Tamilnadu. don''''t spoil more our nation
by a selvakumar,Dublin,Ireland 1/28/2010 4:56:17 AM IST